Thursday, December 23, 2010

நல்ல வேளை பெரியார் சொன்னத யாரும் கேக்கல

 அஜித் சொல்ற மாதிரி I am back,... எல்லா பயலுகளுக்கும் வணக்கம் .. ௧,௭௬,௮௨௯ ..... என்னடா இவன் ஊனா வா எழுதிருக்கானேனு பாக்குறிங்களா . நான் ஒரு தமிழன்னு ( எங்க ஊரு திருநெல்வேலி பக்கம் அப்டின்னா நான் தமிழன் தானா?  தமிழன் னா கோபால புரத்துல இருக்கவுங்க மட்டுந்தானா? )இப்பிடிலாம் பண்ணிதான் prove பண்ணனும் .. ஏன்னா லெமூரியா கண்டத்தில் இருந்தே தமிழகத்தில் தமிழன் தமிழ் என்று சொல்லும் உரிமை கருணாநிதிக்குதான் உண்டு ன்னு வாலிபக்கவிஞர் சொன்னதா கேள்வி பட்டேன் . நாம இப்பிடியாவது prove பண்ணலாம்ல ..

1 ,76 ,329 கோடி ய தான் தமிழ்ல சொன்னேன் , ஏன்னா குவாட்டருக்கு கூட கருணாநிதி பேரன் தமிழ் பேரு வசுட்டாருல்ல .. அந்த அளவுக்கு தமிழ் பற்றுள்ள குடும்பம் எப்பிடி தமிழன்களுக்கு துரோகம் பன்னுவாங்கே.. ஏய் சீ .. இதுக்குதான் யா பாராட்டு விழா ரொம்ப பாக்க கூடாதுன்றது ..

2012 ன்னு ஒரு படம் பாத்திருப்பிங்க ..அதுல scientist கேரக்டர்   climax சீன்ல  சொல்லுவாரு "மனித கலாச்சாரத காப்பாத்த நாம எல்லாருமே சில கஷ்டமான முடிவுகள எடுத்திருக்கோம் நாம மனிதர்கள்னா ஒருத்தருக்கொருத்தர் உதவியா இருக்கணும் கலாச்சாரம்னா மனித இனமே ஒண்ணா சேர்ந்து சிறந்த வாழ்கையை உருவாகனும்னு அர்த்தம், ஆனா இதுக்கு எல்லாம் நேர் மாறா மனித தன்மையை இழந்து கலாச்சாரத்த மறந்து இந்த மாதிரி ஒரு காரியத்த செஞ்சுகிட்டு இருக்கோம் . நாம குழந்தைகளுக்கு இத தான் கலாச்சாரம்னு சொல்லி குடுக்க போறோமா?.."
இது படத்துல வர்ற வசனம் ...
நம்ம குழந்தைங்க நாளைக்கு .. நம்மள பாத்து " ஏம்பா இலங்கைல 1,76000௦௦௦ தமிழன்கல கொன்னப்போ நீ என்ன பண்ண? ன்னு கேட்டா " "ஏம்பா 1 ,76000  கோடி ய கொள்ளை அடிச்சு தமிழன் பேர கெடுத்தானே அவன நீ என்ன பண்ண ?" அப்டின்னு கேட்டா நாம என்ன சொல்லுவோம் ?..மகனே உங்க அப்பன் வெந்தத  தின்னுட்டு வேடிக்கை பாத்து ,உன்ன பெத்தேண்டா ..என்னால வேற என்ன பண்ண முடியும் னா.... சொல்லுவோம்..


  • இவ்ளோ காசு அடிச்சுட்டு ஒருத்தன் நம்ம முன்னாடி ராஜா மாதிரி இருக்கான்.. அவன உள்ள போட்டாலும் தியாகி மாதிரி தான் இருப்பான். அத வச்சு கருணாநிதி ஒட்டு வாங்குனாலும் வாங்குவாரு ...
  • ஒன்ற லட்சம் கோடிய அடிச்சத தமிழனோட சாதனை ன்னு ,கலைஞர் அரங்கத்துல கருணாநிதி பேசத்தான் போறாரு .. அத கேட்டு இத்து போனவைங்கே கை தட்டைதான் போறாங்கே ..
  • அப்புறம் தீவிர தி மு க காரன் ன்னு எவனாவது இருந்திங்கன்னா .. தயவு செஞ்சு விலகிருங்க .. ஏன்னா .தமிழ் நாட்டுல தமிலன்னாலும், தி மு க ன்னாலும் கருணா குடும்பம் தான், அவிங்கே குடும்பத்து காரங்கேலே 234 தொகுதிலயும் நிப்பாங்கே(குடும்ப போட்டோ பாதேன்யா .. அடேங்கப்பா அஞ்சாறு பஸ் வேணும் போல.. கனிமொழி ராசாத்தி யும் சேத்தா கவுன்சிலர் போஸ்ட் கூட எவனுக்கும் கெடக்காது ). அதனால தி மு க ல இருந்தா .. வெண்கல கிண்ணம் கூட கெடைக்காது .. 
  • இந்த ராசா பய புள்ள .. கஜானா ல தான் கைய வச்சானே .. பாவம் இந்த வெவசாயி பயலுக, அவிங்கே எடத்தயுமா ஆட்டைய போடணும்..  இதுக்காகவே உன்னல்லாம் .... நம்ம நாட்டுல அதெல்லாம் பண்ண முடியாது..
  • எனக்கென்ன வருத்தம்னா ராஜா ஆட்டைய போட்டது ஏதோ இத்தாலி காரன் காசு மாதிரி எவனும் கண்டுக்காம அவனவன் வேலைய பாத்துட்டு மூடிட்டு இருக்கிங்களே . எப்பா அது நம்ம காசு ப்பா. உன் வீட்டுக்குள்ள புகுந்து ஒருத்தன் 1000 ரூவா திருடிட்டா மட்டும் திருட்டு ... இது .. உங்கள எல்லாம் "வாயில ஒரு செருப்ப கவ்வ குடுத்துட்டு ,இன்னொரு செருப்ப சாணில முக்கி உச்சாந்தலைல நச்சு நச்சு ன்னு அடிக்கனுமா டா..." 
  • ஒன்ற லட்சம் கோடி ய பயமில்லாம ,குற்ற உணர்வு இல்லாம எடுக்குரான்னா . நம்ம நாட்ட அவன் மதிக்கல .இது தேச துரோகம், இங்க சோத்துக்கு இல்லாம தீவிரவாதியும் ,சமூக விரோதியும் உருவாக காரணமான இவன் யாரு? (இவன் அப்டின்றது ராஜா மட்டுமில்ல ராடிய, மற்ற எல்லாரும் தான் ).
  • இந்தியா ஒரு ஜனநாயக நாடுன்னு சொன்னா.. வாயால சிரிக்க மாட்டங்கே .. இங்க தின கூலி,கொத்தடிமை யும் இருக்கு .. உலக பணக்காரர் பட்டியலில் இடமும் இருக்கு . அடிப்படையிலேயே .. இங்க சமத்துவம் இல்ல .. அத செய்ய முடியாத 60 வருசமா தரகு வேல பாத்த காங்கிரஸ் ..அமெரிக்கா வுக்கும் இத்தாலிக்கும் காட்டி குடுக்க தான் செய்யுது .
  • என்னை பொறுத்த வரை பிஜேபி 100 மடங்கு நல்ல கட்சி... காங்கிரஸ் இந்திய மதங்களை மையமா வச்சு தான் அரசியல் பண்ணிட்டு இருக்கு.. இறையாண்மை, மதசார்பின்மைனா உண்மைலேயே என்ன அர்த்தம் ன்னு காங்கிரஸ் கு தான் வெளிச்சம். நரேந்திர மோடி ஒரு இந்துத்வா கொள்கை உடையவரவே இருந்தாலும் . அவர் தேச துரோகி கிடையாது சிறந்த முதல்வர்.. நமக்கு தான் இன உணர்வும் கிடையாது நாட்டு உணர்வும் கிடையாதே . இங்க ஊழல் பண்ணா அவன் தலித் ன்னு சொல்லி தப்பிக்க பாக்குறது ....அம்பேத்கர் என்ன தலித் கள் ஊழல் செய்ய திரண்டு வாரீர் னா  சொன்னாரு ...


 பெரியார் சொன்னத கேக்காத தால தமிழ் நாடே இன்னிக்கு அமைதி பூங்காவா இருக்கு.. ஒரு வேள பெரியார் சொன்ன பகுத்தறிவு மட்டும் தமிழன் மண்டைல ஏறி இருந்தா .. அவனவன் ரோட்ல எறங்கி போரட்டம்ல நடத்தி இருப்பாங்க.. ..இப்ப தான் இலங்கை தமிழனுக்கே அறிவு வந்து ராஜா பக்ஷே வ அடிச்சு வெரட்டிருக்காங்கே.. இங்க உள்ள தமிழன்களுக்கு அறிவு வர இன்னும் எவ்ளோ நாள ஆகும்னு தெரியல ..

பெரியார் சொனன இன்னொரு மேட்டரு .. நாத்திகம் .. இது தமிழன் மண்டைல ஏறாம போனது . ரொம்பவே நல்லதுபபா... ஏன்னா . ஒரு பூ கட்டுற அம்மா இன்னிக்கு நான் அம்பது ரூபா சாம்பாதிக்கிறது போதும். நான் தப்பு  செஞ்சா சாமி தண்டிக்கும் ன்னு நெனச்சு தான் . வாழ்க்கை ய ஓட்டிட்டு இருக்காங்க.. எவன் தப்பு பண்ணாலும் கடவுள் தண்டிப்பாரு நம்ம வேலைய பாத்து கஞ்சி குடிப்போம் ன்னு நெனக்கிறாங்க .. இவங்க எல்லாம் நாத்திகரா மாறி இருந்தாங்கன்னா .

ஒரு பய வேள பாக்க மாட்டங்கே .. சாமி கண்ண குத்துரதா.. டேய் அந்த ராசா பய புள்ளய குத்துங்கடானு கெளம்பிருப்பங்கே...நாடு அமைதியாவே இருந்திருக்காது ...  அதான் சொன்னேன் பெரியார் சொன்னத கேக்காதது நல்லது. கேட்டிருந்தாதான் சூடு, சொறன வந்து இருக்கும்ல ..அதெல்லாம் நமக்கு எதுக்கு ...