Monday, August 16, 2010

என் இனிய இண்டியன் சிட்டிசன்ஸ்

அனைவருக்கும் சொதந்திர தின வாள்துகள் ....அப்படின்னு டமில் டிவி காரய்ங்க சொன்னத மல்லாக்க படுத்துகிட்டே கேட்டு சொதந்திரத்த கொண்டாடின இண்டியன் சிட்டிசன்களே, வணக்கம் .    அதே மாதிரி நான் படுத்து கிட்டே கண்ட கனவு (பகல்)     இந்த 64 வருசத்துல  இந்தியா எவ்வளவு மாறிடுச்சுப்பா.. நெனக்கவே சந்தோசமா இருக்கு ..எல்லா அரசியல் கட்சி தலைவருகளும் சேந்து கொடி ஏத்துராய்ங்க..கருணாநிதி ஜெயலலிதாவுக்கு மிட்டாய் குடுக்குறாரு ..(ஆஹா இதுவல்லவோ அரசியல் நாகரிகம்..)அந்த அம்மாவும் மிட்டாய் சாப்பிட்டுட்டு தமிழக அரசின் திட்டங்களின் சிறப்புகளையும், அத இன்னும் நல்லா develope  பண்ண ஐடியாவும்  கொடுத்து பேசுறாங்க ..
அதிலிருந்து சில பிட்டுகள் :
மாண்பு மிகு மைனாரிட்டி அரசு ... sorry (பழக்க தோஷம் )தமிழக முதல்வர் டாக்டர்,முத்தமிழ் அறிஞர் ,கலைஞர், கருணாநிதி (போதும்மா ரொம்ப லென்தா போயிட்டிருக்கு ... )  அவர்களே ..உங்கள் ஆட்சி ஒரு நல்ல ஆட்சி,
இந்தியாவில் குஜராத்திற்கு பிறகு முழு மதுவிலக்கு அமல் படுத்தப்பட்ட மாநிலமாக தமிழகம் உருவாகிட நம் திராவிட அரசுகள் எடுத்த நடவடிக்கைகளால் இன்று தமிழகம் மதுவும்  புகையும் இல்லா  மாநிலமாக உள்ளது.
மகாத்மா காந்தியை தவிர தமிழகத்தில் யாருக்கும் சிலை வைக்க வேண்டாம்(கண்ணகி உட்பட..)  என தாங்கள் நேற்று அறிவித்ததை நானும் வரவேற்கிறேன்.
காந்திக்கும்,பெரியாருக்கும் பிறகு அதிக காலம்  "தம்"  மக்களுக்காக உழைத்த தலைவர்
இந்தியாவிலேயே நீங்கள் மட்டும்தான், உங்கள் ஆட்சியில் எதிர்கட்சி  தலைவராக   நான்  இருப்பதற்கு மகிழ்வடைகிறேன்
பெரியாரின் பகுத்தறிவும்,அண்ணாவின் செயல்திறனும் ஒருங்கே உள்ள உத்தமராம்  தங்கள்  அரசை  விமர்சிக்க இந்த எளியவளுக்கு வயதில்லை அதனால் தங்களை  வணங்கி  விடை பெறுகிறேன்
 நன்றி வாழ்க இந்தியா .

அடுத்து முதல்வர்:
முதற்கண் அனைவருக்கும் இனிய சுதந்திர தின நல வாழ்த்துக்கள்..
மாண்பு  மிகு எதிர்கட்சி தலைவி சகோதரி, தங்க தாரகை, டாக்டர்,
செல்வி ஜெயலலிதா அவர்களே ..  தமிழகத்தில் இரண்டு (தி மு க ,அ தி மு க)  கட்சி களை தவிர வேறு கட்சிகளே இல்லாத பற்றாக்குறையை  போக்க,  என்    வேண்டுகோளுக்கிணங்க  கட்சி தொடங்கிய    தம்பி விஜயகாந்த் அவர்களே,   அனைவருக்கும் வணக்கம்...
வாரிசு அரசியலில் எனக்கும் என் குடும்பத்தாருக்கும் விருப்பம் இல்லாததாலும்,வயது முதிர்வு காரணமாகவும் ஆட்சியையும்,கட்சியையும்  கலைக்க  நான் எவ்வளவோ  முயற்சி செய்தேன். ஆனால் எதிர்கட்சி தலைவியும் என் சகோதரியுமான ஜெயலலிதா வேண்டாம் என்று  கூறிய ஒரே காரணத்தினால்..அவர் அன்புக்கட்டளையை மீற முடியாமல் நான் இன்னும் என் மக்கள் பணியை தொடர்கிறேன்.

நாம் பெரியாரின்  பாசறையில் இருப்பவர்கள் ஆனாலும்  காந்தியின் குழந்தைகள் என்பதை மறக்கக்கூடாது. காந்தியின் சத்திய சோதனையும், பெரியாரின் புத்தகங்களையும் இளைஞர்கள் படித்து பயனுற வேண்டும்.

நான் இந்த ஆண்டு முதல் என் எழுத்து பணியிலிருந்து ஓய்வு பெற விரும்புகிறேன்(சகோதரி ஜெயலலிதாவின் அனுமதியோடு ) .

நான் எவ்வளவோ முயற்சித்தும் அரசியல் கட்சி ஆரம்பிக்காமல் பசுமை தாயகம் மூலம் தமிழகத்தில் இது வரை 2 கோடி மரக்கன்றுகளை நட்ட டாக்டர் ராமதாஸ் அவர்களுக்கு "பசுமை பெரியார்" விருது வழங்குவதில் நான் மகிழ்வடைகிறேன்.

தமிழீழம் மலர்ந்த ௦10  வது ஆண்டு விழாவிற்கு செல்ல தம்பி வைகோ தலைமையில்
10 பேர் கொண்ட குழுவை அனுப்ப  ஒரு மனதாக ஒப்புக்கொண்டமைக்கு நன்றி.
நன்றி....

அப்பன் பண்ண தப்புல .. திருப்பாச்சி  பாட்டு(சொதந்திர தின சிறப்பு படம் ) ..சத்தம் கேட்டதும்.. ங்கோயால கனவா...
வாழிய பாரத சமுதாயம் வாழ்கவே.. வாழ்க.. வாழ்க..

1 comment:

  1. டியர் சார் வணக்கம்.
    மக்களின் பணத்தில் குப்பை கொட்டும் கதாநாயகனைப் பற்றிய
    காமெடி விமர்சனம் மிக மிக ரசிக்கும் விதத்தில் உள்ளது.
    நான் மக்கள் வரிப்பணத்தில் வாழும் உலக விஞ்ஞானிகளை காமெடியாகவும் கோபமாகவும்
    5-நிமிட படம் எடுத்து வெளியிட்டுள்ளேன்.தயைகூர்ந்து தாங்கள் வந்துபார்த்து உங்கள் மேலான கருத்துகளை அனுப்புங்கள்.
    நன்றி.ரவி.


    www.avasaramda.blogspot.com

    ReplyDelete